×

செல்பி விவகாரம் பிருத்வி ஷா மீது நடிகை பாலியல் புகார்

மும்பை: கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் மீது நடிகை சப்னா கில் மும்பை போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார். செல்பி விவகாரத்தில் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சமூக வலைத்தள பிரபலமும் நடிகையுமான சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சப்னா கில், அவரது நண்பர்கள் ஷோபித் தாக்கூர், ஆஷிஷ் யாதவ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜாமீன் கோரி விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, அவர்கள் மூவருக்கும் ஜாமீன் வழங்கி மும்பை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜாமீனில் வெளி வந்துள்ள நடிகை சப்னா போலீசில் அளித்த புகாரில், `இந்த சம்பவத்தின்போது பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள், தன்னையும், தன் நண்பர்களையும் குடிபோதையில், சாலையில் அடிக்க முயற்சித்தனர். மேலும் பாலியல் துன்புறுத்தலும் செய்தனர். எனவே, அவர்கள் மீது பாலியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.


Tags : Prithvi Shah , Actress sexual complaint against Prithvi Shah over selfie issue
× RELATED சில்லிபாயிண்ட்…